பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கள வில்வித்தை போட்டியில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்கள் தட்டி சென்றனர் .
மாவட்ட அளவிலான கள வில்வித்தை போட்டி பிப்ரவரி 27 தேதி பொள்ளாச்சியில் நடைபெற்றது .இந்த போட்டியில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட சேர்ந்த 18 மாணவர்கள் கலந்து கொண்டனர் . மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் மாஸ்டர் திரு ஜேபி.சிவபாலன் மற்றும் திருமதி வினோதா தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . பின்னர் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
மாஸ்டர் திரு ஜேபி.சிவபாலன் மற்றும் திருமதி வினோதா தலைமையில் 15 தங்கமும் 3 வெள்ளி பதக்கமும் வழங்கினர் மற்றும் 4ஆம் இடத்திற்கு வந்துள்ளனர் .இந்த போட்டியில் சிறந்த மாவட்டத்திற்காக செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் பரிசும் காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர். இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக மஹாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்