நம்பிக்கையுடன் சேமியுங்கள்: சுந்தரம் ஃபைனான்ஸ் அறிமுகம்செய்யும் டிஜிட்டல் டெபாசிட் வசதி

செவ்வாய், மார்ச் 04, 2025: இந்தியாவில் மக்களின் அதிகநம்பிக்கையைப் பெற்ற வங்கிசாரா நிதி நிறுவனங்களுள் முன்னணிவகிக்கும் சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட், டிஜிட்டல் டெபாசிட் வசதிஎன்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.  இதன்மூலம் சேமிப்புகள்செய்வதை அதிக எளிமையானதாகவும், மிகுந்த பாதுகாப்பானதாகவும்மற்றும் எளிதில் பயன்படுத்தி பயனடையக்கூடியதாகவும்ஆக்கியிருக்கிறது.  70 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில்இயங்கி வரும் சுந்தரம் ஃபைனான்ஸ் ஆழமான நம்பிக்கை மற்றும்நிதிசார் பாதுகாப்பு என்பதோடு இணைத்தே பார்க்கப்படுகின்ற நிதிநிறுவனமாக நாடெங்கிலும் நன்மதிப்பை பெற்றிருக்கிறது.  ஒருஇலட்சத்திற்கும் அதிகமான டெபாசிட்தாரர்கள் என்ற வலுவானஅடித்தளத்தைக் கொண்டிருக்கும் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின்டெபாசிட்கள் (வைப்புத்தொகை), 30 ஆண்டுகளுக்கும் அதிகமாகICRA மற்றும் CRISIL தரமதிப்பீடு அமைப்புகளால் AAA என்றதரவரிசையை தொடர்ந்து பெற்றிருக்கின்றன.  மிக உயர்ந்தஅளவிலான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை இந்ததரமதிப்பீடுகள் குறிக்கின்றன.  இப்போது சுந்தரம் ஃபைனான்ஸ்நிறுவனத்தில் ஒரு டெபாசிட் கணக்கைத் தொடங்குவது மிக மிகஎளிதானது.  ஒரு சில கிளிக்குகளில் இதனை வாடிக்கையாளர்கள்செய்ய முடியும்.  மிக எளிதான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல்செயல்முறை வழியாக வாடிக்கையாளர்கள் சௌகரியமாகடெபாசிட்களை முதலீடு செய்யலாம் மற்றும் அவர்களது டெபாசிட்களைநிர்வகிக்கலாம்.  கவர்ச்சிகரமான வட்டி வருவாயை வழங்குவதோடு, மனநிம்மதியையும் இனிய சேவை அனுபவத்தையும் வாடிக்கையாளர்கள்பெற்று மகிழலாம்.   தங்களது இல்லங்களில் வசதியாக இருந்து கொண்டே தங்களதுபணத்தை முதலீடு செய்து பெருக்குவதற்கு சுந்தரம் ஃபைனான்ஸ்வழங்கும் டிஜிட்டல் டெபாசிட் திட்டம் வழி வகுக்கிறது.  டெபாசிட்கணக்கை தொடங்கவும், அதனை நிர்வகிக்கவும் மற்றும்விரும்பும்போது அதனை கண்காணிக்கவும் எளிதான வசதியை இது வழங்குகிறது.  CERSAI – இடமிருந்து KYC விவரங்களை பதிவிறக்கம்செய்வதன் மூலம் டிஜிட்டல் முறையிலான ஃபிக்சட் டெபாசிட்கணக்கைத் தொடங்குவதை ஒரு எளிதான செயல்முறையாக சுந்தரம்ஃ.பைனான்ஸ் ஆக்கியிருக்கிறது.  இந்த ஆன்லைன் பரிவர்த்தனையைஇந்நிறுவனத்தின் இணையவாசல் வழியாகவும் மற்றும் SF நெக்ஸ்ட்செயலி வழியாகவும் எளிதாக மேற்கொள்ளலாம்.    “பல தலைமுறைகளாக நிதிசார் பாதுகாப்பில் ஆழமானநம்பிக்கைக்குரிய கூட்டாளியாக சுந்தரம் ஃபைனான்ஸ் இருந்துவருகிறது.  எமது டிஜிட்டல் டெபாசிட் திட்ட அறிமுகத்தின் மூலம்முதலீடு செயல்முறையை இன்னும் எளிதானதாகவும், சிரமமற்றதாகவும்நாங்கள் ஆக்கியிருக்கிறோம்.  ஐந்து எளிதான படிமுறைகளில் வாடிக்கையாளர்கள் இப்போது டெபாசிட் செயல்முறையை பூர்த்திசெய்ய முடியும்; மற்றும் உடனடியாகவே E-TDR (எலக்ட்ரானிக்முறையிலான டெபாசிட் இரசீது) – ஐ பெற முடியும்.  தாங்கள் டெபாசிட்செய்த பணத்தின் நிதிசார் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்ய ஒருநியமனதாரரை நியமிக்குமாறு தனிநபர் டெபாசிட்தாரர்களை நாங்கள்ஊக்குவிக்கிறோம்.  மேலும் தானியக்க முறையில் முதிர்வு தேதியில்பணம் கிடைப்பதையும், டெபாசிட்தாரர்கள்  தேர்வு செய்யலாம்.  நிதிசார் பாதுகாப்பிற்காக AAA தரமதிப்பீடு மற்றும் பலதசாப்தங்களாக இருந்து வரும் ஆழமான நம்பிக்கையின் பின்புலஆதரவோடு இயங்கி வரும் நாங்கள் முழுமையான மனநிம்மதியைஏதுவாக்க எப்போதும் சிறப்பான தேவை தரங்களைப்பின்பற்றுகிறோம்....