தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதகங்களை வென்ற தனலட்சுமிக்கு உற்சாக வரவேற்பு.

திருச்சியை சேர்ந்த சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான மணிகண்ட ஆறுமுகம் அவர்கள் தலைமையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாளவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதகங்களை வென்ற தனலட்சுமி, 200 மீட்டர் ஒட்டபந்தயத்தில் 100மீட்டரில் 11.38 sec ல் தங்கமும் 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 21.18 sec ல் தங்கத்தை வென்று முந்தைய சாதனையாண பி.டி உஷா அவர்களின் 23.26 நொடிகளில் 23 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் தஞ்சாவூரை சேர்ந்த ரயில்வே ஊழியர் V.Kஇலக்கியதாசன் 100மீட்டர் ஓட்டபந்தயத்தில் 10.43sec ல் வெள்ளி பதக்கத்தையும் 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 21.18.sec ல் தங்கபதக்கத்தையும் A.விக்னேஷ் 200 மீட்டர் ஒட்டபந்தயத்தில் 21.57.sec ல் வென்களபதக்கத்தையும் வென்று சாதணை படைத்தனர் இவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாளவிலிருந்து ரயில் மூலமாக திருச்சிக்கு 21-03-2021 ஞாயற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் வந்தடைந்தனர் திருச்சி ரயில் நிலைத்திற்க்கு வந்தவர்களை ரயில் நிலையத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் & நடிகருமான ஆர்.ஏ தாமஸ் வழக்கறிஞர் ஆறுமுகம் தலைமையில் மாற்றம் அமைப்பின் சார்பில் மாலை பொன்னாடை மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தடகள சஙக செயலர் D.ராஜு ,தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்த்தின் நிர்வாகி சிவபிரகாசம்,S.பகவதி, மாற்றம் அமைப்பை சேர்ந்த எழில் ஏழுமலை,திருப்பதி மணிவேல், தினேஸ்குமார்,நவீன், ரத்தினம்,ஶ்ரீதர், தினகரன்,ராகுல்,சிவா, ரங்கா,முஸ்ரப்,தினேஷ்,சிவனேஷ்,யோகா, சர்வேஸ்வரா,ராசிகா, ராஜேஸ், ஜோசப்,பாண்டி,மைக்கேல் உள்ளிட்டோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில்வே ஊழியர்கள் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *