இந்தியாவை உளவு பார்க்க உயர் அதிகாரியை அனுப்பிவைத்த இலங்கை… திடீர் விசிட்டால் பரபரப்பு!

துணை உயர் ஆணையரின் திடீர் விசிட்! 
இந்தியாவை உளவு பார்க்கிறதா இலங்கை…?
கடந்த ஏப்ரல் 12 ம் தேதி தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணைராக வெங்கடேஷ்வரன் என்பவர் ராஜபக்க்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, அவர் பொறுப்பேற்று கொண்ட நாள் முதல் பல்வேறு நாடுகளுக்கு சென்று அந்நாட்டில் உள்ள முக்கிய வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார்.

அதன்படி, இந்தியாவிற்கு வந்த வெங்கடேஷ்வரன் முதலில் கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த வெங்டேஷ்வரன், தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்தார். அதன்பிறகு காரைக்கால் துறைமுகத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
ஏற்கனவே,  இலங்கையில் சீனா துறைமுகத்தை கட்டமைத்து வருகின்ற இந்நேரத்தில் இலங்கையை தன்வசப்படுத்தி இந்தியாவிற்கு எதிராக பல்வேறு திட்டங்களை தீட்ட சீனா திட்டமிட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் கைக்கூலி இருக்கும் வெங்கடேஷை இந்தியாவிற்கான இலங்கை தூதராக நியமனம் செய்து தமிழகத்தில் நடக்கும் பல்வேறு செயல்களை உளவு பார்ப்பதற்காக இலங்கை ஜனாதிபதி முடிவு செய்து திட்டங்களை தீட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.


தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகம், காரைக்கால் துறைமுகம், சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது .
இதனால் இந்த இரண்டு துறைமுகங்களின் கட்டமைப்புகளை பலவீனப்படுத்த பல்வேறு முயற்சிகளில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவின் கைப்பாவையாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் காரைக்கால் துறைமுகத்தில் ஆய்வு நடத்துவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால்.


தமிழகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காரைக்காலில் உள்ள துறைமுகத்தில் என்ன கட்டமைப்பு இருக்கிறது என்பதை முழுமையாக இலங்கைக்கு உளவு சொல்வதற்காகவே இலங்கை தூதர் வெங்கடேஷ் நியமனம் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.தற்போது இந்தியாவிற்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் இந்த வெங்கடேஷ் 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களையும் விடுதலை புலிகளையும் கொன்று குவித்த சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரன் ஆகியோரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த தமிழின ‌துரோகி தான் வெங்கடேஷ்.
அதேபோல 2009ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளுக்கு எங்கிருந்து உணவுகள், உணவு பொருட்கள் வருகின்றன ? அவர்களுடைய போக்குவரத்திற்கான பெட்ரோல், டீசல் எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பான ரகசியங்களை இலங்கை ராணுவத்திற்கு அப்போது தந்து தனக்கு தேவையான சன்மானங்களை வெங்கடேஷ் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.


இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இங்கு நடக்கும் பல விஷயங்களை அலுவல் ரீதியாகவும் ரகசியமாகவும் இலங்கை அரசுக்கு தெரிவிக்க தன் அடிமைகளில் ஒருவரான வெங்கடேஷை தமிழகத்திற்கு ராஜபக்சே அனுப்பி வைத்திருக்கிறார் .
இந்த நியமனம் தொடர்பான நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்ட சென்னை இலங்கை தூதரக அதிகாரிகள், இதுவரை இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் Srilanka Foreign Service நியமனம் மூலமே தேர்வு செய்யப்பட்டார்கள்.
கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் தமிழர்களாக இருந்த போதிலும் ராஜபக்க்ஷே அரசுக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஒத்துழைப்பு வழங்கவில்லை.


இந்த தகுதியான தமிழர்கள் இருந்த போதிலும் Srilanka Foreign Service தகுதியும் இல்லாத நபரை இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறி இந்தியாவிற்கான இலங்கை தூதராக வெங்கடேஷை நியமிக்கபட்டிருப்பதற்கு பின்னால் பல ரகசியங்கள் உள்ளன.இந்த நியமனம் மூலம் அரசின் ரகசியங்களை ராணுவ உளவாளியான வெங்கடேஷ் மூலம் தெரிந்து கொள்ள இலங்கை அரசு விரும்புகிறது.
சமீபத்தில் திருச்சியில் உள்ள Kothagiri sugars and Chemicals Ltd நிறுவனத்திற்கு இலங்கை தூதர் வெங்கடேஷ் நேரடியாக சென்று பார்வையிட்டு உள்ளார். திருச்சியில் உள்ள நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கான இலங்கை தூதருக்கும் என்ன சம்பந்தம்?
திருச்சியில் உள்ள இந்த நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டது தொடர்பாக இந்தியாவிற்கான இலங்கை தூதர் வெங்கடேஷ் அதிகாரப்பூர்வ இலங்கை தூதர் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிடும்போது இலங்கை ஜனாதிபதி வழிகாட்டுதலின் பேரில் இந்த நிறுவனத்தை பார்வையிட வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ரகசியங்களை இலங்கை அரசுக்கு உறவு சொல்வதற்காகவே இந்தியாவிற்கான இலங்கை தூதராக ராஜபக்சேவின் கைக்கூலி வெங்கடேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு நேரடியாக சென்றதோடு இலங்கை ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மூலமாக தான் அங்கு சென்றதாக தைரியத்தோடு இலங்கை தூதர் வெங்கடேஷ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதேப்போல தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் வெங்கடேஷ் ஆய்வை நடத்தி முடித்திருக்கிறார். 
முட்டியாரா அனல் மின் நிலையத்திற்கு நேரில் சென்ற வெங்கடேஷ் அங்கு நடைபெற்று வரும் ஆய்வு பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளார்.


ஏற்கனவே தூத்துக்குடி துறைமுகத்திற்கு சீனாவின் அச்சுறுத்தல் உள்ள நிலையில் சீனாவின் நட்பு நாடான இலங்கையின் துணை உயர் ஆணையர் ஏன் நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார் என்பதே அனைவரின் கேள்வி.
இப்படி தமிழகத்தில் பல இடங்களுக்கு சென்று ராணுவ உளவாளி வெங்கடேஷ்வரன் அங்குள்ள தகவல்களை பெற்று இலங்கைக்கு உளவு சொல்கிறார்.


தகுதியான தமிழர்கள் இருந்த போதிலும் Srilanka Foreign Service தகுதியும் இல்லாத நபரை இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறி இந்தியாவிற்கான இலங்கை தூதராக வெங்கடேஷை நியமிக்கபட்டிருப்பதற்கு பின்னால் பல ரகசியங்கள் இருப்பதாக சந்தேகங்கள் எழுகின்றனர். 
இவரின் இந்த நியமனம் மூலம் அரசின் ரகசியங்களை ராணுவ உளவாளியான வெங்கடேஷ் மூலம் தெரிந்து கொள்ள இலங்கை அரசு விரும்புவதால் தமிழகத்தில் உள்ள பல அதிகாரிகளை சந்தித்து தமிழக அரசு தகவல்களையும் உளவு பார்த்து இலங்கைக்கு தகவல் அனுப்புகிறார் என்ற அதிர்ச்சிகர செய்தியும் கிடைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *