பேரிடர் மருத்துவம் குறித்த தேசிய மாநாட்டை வடபழனி விஜயா ஹெல்த் சென்டரில் நடத்தியது

விஜயா மருத்துவமனை குழுமத்தின்

விஜயா மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளை இந்திய மருத்துவ சங்கம், சென்னை விஜயா மருத்துவனையுடன் இணைந்து,

பேரிடர் மருத்துவம் குறித்த தேசிய மாநாட்டை வடபழனி விஜயா ஹெல்த் சென்டரில் நடத்தியது

இந்த மாநாட்டில்
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு . எஸ்.மணிகுமார் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் விஜயா மருத்துவனை குழுமத்தின் சீனியர் மருத்துவர் மற்றும் எமர்ஜெண்சி மருத்துவர் அருண் ஆகியோர் கூட்டாக கூறியது

இந்த பேரிடர் மேலாண்மையில் சிறப்பு நிபுணத்துவம் கொண்ட பல மருத்துவர்கள் இந்த மாநாட்டி கலந்து கொண்டு, எதிர்பாராத பேரிடர்களின் போது சுகாதார மருத்துவ சேவையை தொடர்ந்து வழங்க பல்வேறு ஆலோசனைகளை வாங்கினார்கள்

எங்களை தயார் படுத்தி கொள்ள இந்த மாநாடு வழி வழிவகுக்கிறது இதில் பங்கேற்கும் மருத்துவமனைகளின் விழிப்புணர்வையும், தயார்நிலையின் அளவையும் உயர்த்துவதே இந்த மாநாட்டில் எடுத்துரைக்க பட்டது

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை பல செயல் முறை விளக்கங்களையும் சோதனை பயிர்ச்சிகளையும் செய்து காட்டியது ,விஜயா மருத்துவமனை சமீபத்தில் தனது பொன்விழாவைக் கொண்டாடியது . விஜயா மருத்துவமனை மருத்துவத் துறையில் அறிவினை பகிர்ந்து கொள்வதை ஒரு சமூகப் பணியாக எடுத்துக்கொண்டு தொன்றுதொட்டு செயல்பட்டு வருகிகிறோம் இந்த பேரிடர் மருத்துவம் தகுதியான கவனத்தைப் பெறுவது மிக மிக முக்கியம் ஆகும். நம் சமூகத்தில் இந்த ஒரு மாநாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை . என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *