குளிர் காலங்களில் இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகள்

கோயம்புத்தூர், டிசம்பர் 2021: கோயம்புத்தூரில் உள்ளசிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- குமரன்மருத்துவ மையம்), அவர்களின் முன்மாதிரியானமருத்துவ சேவைகள் மூலம் ஆரோக்கியமானசமுதாயத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, இருதயவியல் நிபுணர்களானடாக்டர்.ஏ.ஈஸ்வரன் எம்.டி., டி.என்.பி (இருதயவியல்) மற்றும் டாக்டர்.கே.கார்த்திக் எம்.டி., டி.என்.பி(இருதயவியல்) ஆகியோர் குளிர்காலத்தில்உண்டாகக்கூடிய இதய நோய் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தெளிவானவிளக்கத்தையும் விழிப்புணர்வையும் வழங்குகிறார்கள்.  குளிர்காலத்தில் இதய நோய் ஆபத்து 30% அதிகமாகஇருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து குமரன் மெடிக்கல் சென்டரின் இருதய நோய்நிபுணர்கள் டாக்டர்.ஏ.ஈஸ்வரன் மற்றும்டாக்டர்.கே.கார்த்திக் ஆகியோர் கூறுகையில்குளிர்காலத்தில் உடல் சூடாக இருக்க வேண்டும்என்பதால், தொடர்ந்து அதிகமான ரத்த ஓட்டம்உடலுக்கு தேவைப்படும். எனவே, இதயத்தின் வேலைகடினமானதாக மாறுகிறது. கடுமையான குளிர் இரத்தநாளங்கள் சுருங்க வழிவகுக்கிறது. எனவே, இதுஇதயத்திற்கு செல்லும் இரத்த நாளத்தையும் சுருங்கச்செய்கிறது. இந்த செயல்களால், இதயம் அதிக வேலை பளுவில் செயல்படுவதால்  குளிர்காலத்தில் இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. குளிர்காலத்தில்வியர்வை குறைவதால், உடலில் உப்பு மற்றும் நீரின்அளவு அதிகரிக்கிறது. இது உடலில் இரத்த அழுத்தம்அதிகரிக்க வழிவகுக்கிறது. இதய நோய் ஏற்பட இதுவும்ஒரு முக்கிய காரணம். குளிர் காலத்தில், உடலில்ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இந்த ஹார்மோன்மாற்றங்களினால், இரத்த உறைவு ஏற்படுவதற்கானஆபத்து அதிகமாக வாய்ப்புள்ளது. குளிர்காலம்காரணமாக, பலர் அதிகாலையில் எழுந்திருக்கமாட்டார்கள், வழக்கமான உடற்பயிற்சிகளைத்தவிர்க்கவும் செய்கிறார்கள் அவர்களின் வழக்கமானஉடல் செயல்பாடுகளைத் தவிர்ப்பது இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. பொதுவாக, குளிர்காலம்பசியைத் தூண்டும். எனவே, பலர் அதிக கலோரிகொண்ட ஆரோக்கியமற்ற உணவைஉட்கொள்கின்றனர். இதனால் இதய...